கருணாநிதியிடம் ஆதரவைத் தெரிவித்தார் குமரி அனந்தன்
சென் னை:
தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் வெள்ளிக்கிழமை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தனது கட்சியின் ஆதர வைஅவரிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக த லைவராக, எம்.எல்.ஏவாக, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் த லைவராக,காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளர் பிரிவுகளில் ஒன்றின் தலைவராக, தியாகிகளுக்காக பாதயாத்திரை போனவராக பலஅவதாரம் எடுத்தவர் குமரி அனந்தன். சிறந்த பேச்சாளரான இவர் கொஞ்ச நாள் அடக்கி வாசித்தார். இப்போது மீண்டும் தீவிரஅரசியலில் ஈடுபடுகிறார்.
தொண்டர்களுக்காக என்று கூறி தொண்டர் காங்கிரஸ் என்ற புதுக் கட்சி யைத் துவக்கியுள்ளார். இந்தக் கட்சி தேர்தலில் திமுகவுக்குஆதரவாக உ ழைக்கும் என்றும் உறுதி படக் கூறியிருந்தார். முதல்வர் கருணாநிதி யை வாழ் நாள் முழுவதும் மறக்க மாட் டேன்என்றும் உணர்ச்சி பொங்கக் கூறியிருந்தார். திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், வெள்ளிக்கிழ மை முதல்வர் கருணாநிதி யை அவரது கோபாலபுரம் வீட்டில் சென்று குமரி அனந்தன் சந்தித்தார்.தனது கட்சியின் திமுக ஆதரவை தெரியப்படுத்தினார். அப்போது அ மைச்சர் ஆர்க்காடு வீராசாமி, கருணாநிதியின் மகனானசென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் உடனிருந்தனர்.
கருணாநிதி யைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் குமரி அனந்தன் பேசு கையில், எனது கட்சியின் ஆதரவை முதல்வரிடம்தெரிவித் தேன். அதற்காக அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். வரவேற்றார்.
கருணாநிதி தான் மீண்டும் முதல்வராக வருவார், வர வேண்டும். எங்களது கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துத் தேர்த லைச்சந்திக்கும். மன நிறைவு தரும் வகையில் எங்கள் கட்சிக்கு முதல்வர் கருணாநிதி தொகுதிக ளை ஒதுக்குவார் என்று நம்புகிறோம்.
தமிழகத் தைப் பொருத்த வரை இரண்டே அணிகள்தான். அதில் கருணாநிதி த லைமையிலான திமுக அணிதான் அ மோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்றார் குமரி அனந்தன்.












Click it and Unblock the Notifications