இவர்கள் வீடு கேட்டுத் தான் வந்தார்கள், ஆனால்...
ஈரோடு:
வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களைப்பட்டப் பகலில் கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோட்டில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ராமலிங்கம் (63). இவரதுமனைவி ருக்மணி (52). இவர்கள் வீட்டின் மாடிப் பகுதியை வாடகைக்கு விட முடிவுசெய்து அங்கு வாடகைக்கு வீடு கிடைக்கும் என்ற போர்டு மாட்டி வைத்தனர்.
இதனைப் பார்த்த நான்கு வாலிபர்கள் அவரது வீட்டிற்கு வந்து வாடகையைவிசாரித்தனர். நாளை வருவதாகக் கூறி அவர்கள் சென்று விட்டனர். மறுநாள் மாலைநான்குபேரும் மீண்டும் வந்து வீட்டைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அப்போது வீட்டில் ருக்மணி மட்டும் இருந்துள்ளார். ருக்மணி வீட்டைக் காண்பிக்கசாவியை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அப்போது கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட அத 4 பேரும் ருக்மணியை மிரட்டினர்.
சாவியைப் பிடுங்கி பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications