அ.தி.மு.க-த.மா.கா. கூட்டணி உறுதியானது?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க., த.மா.கா.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடுஉடன்பாடு கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. அ.தி.மு.க 127 இடங்களில்போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.

உடன்பாடு குறித்த முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படலாம் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதுதொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இறுதியாக தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தமாக 50 இடங்கள்ஒதுக்க ஜெயலலிதா முன் வந்துள்ளார். அப்படி ஒதுக்கப்பட்டால், காங்கிரஸ்கட்சிக்குரிய இடங்களை த.மா.கா. வழங்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் தலா 10 இடங்கள் வழங்கப்படலாம். இந்தியதேசிய லீக் உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகளுக்கு மொத்தமாக 10 இடங்கள்.ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 27 இடங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

இந்தத் தொகுதிகள் போக மீதமுள்ள 127 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும்.

புதுவையில் தனித்தனியாக போட்டி:

மேலும், தமிழகத்தில் மட்டுமே அதிமுக அணியில் தமாகாவும், காங்கிரஸும்இருக்கும். புதுவையில் ஆட்சிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடுஏற்படவில்லையாதலால், தனி அணியாக இரு கட்சிகளும் போட்டியிடவுள்ளன.

அதன்படி அதிமுக-பா.ம.க. ஒரு அணியாகவும், த.மா.கா.-காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடும். இதில் அதிக இடங்களில்வெற்றி பெறும் அணி பிற அணியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் என்றும்உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மொத்தத்தில் பாண்டிச்சேரியில் திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பது என இருஅணிகளும் முடிவு செய்துள்ளன.

வெள்ளிக்கிழமை நல்ல நாளாதலால், ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கூட்டணி குறித்தமுடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+