பூமியில் விழப் போகிறது மிர் விண்கலம்
சுவா:
ரஷியாவின் மிர்விண்கலம் தென்பசிபிக் நாடுகளை தாக்காமல் கடல்பகுதியில் மட்டுமே விழும் என ரஷியாதெரிவித்துள்ளது.
விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் மிர் விண்கலத்தை நிர்வகிக்க போதுமான நிதி வசதி இல்லை என்பதால்அதனை அழித்து விட ரஷியா முடிவு செய்துள்ளது.
விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் இந்த விண்கலம் காற்று மண்டலத்தில் ஏற்படும் உராய்வு காரணமாகசிதைந்து விடும். இந்த உடைந்த பாகங்கள் பூமியின் தென்பசிபிக் கடல் பகுதியில் நியூஸிலாந்திற்கு கிழக்கே 3000கி.மீ தொலைவில் வந்து விழும்.
இப்பகுதியில் உள்ள பல்வேறு தீவுகளில் மர வீடுகளே இருப்பதால் விண்கலத்தின் பாகங்கள் தங்கள் நாடுகளைதாக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க கோருகின்றன தென்பசிபிக் கடல்பகுதி நாடுகளின் கூட்டமைப்பு.
விண்கலத்தின் பாகங்கள் கடல் பகுதியில் மட்டுமே விழும் என ரஷியா கூறியுள்ள போதிலும், தீவுப்பகுதியில்விழுந்து சேதம் ஏற்பட்டால் நிதியுதவி அளிக்கும் பொருட்டு 200 மில்லியன் டாலர்களுக்கு இன்சூரன்ஸ்எடுத்துள்ளது.
தென்பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பின் தற்காலிக பொதுச்செயலாளரான அயோசேவா மயாவா கூறும் போது,விண்கலம் பூமியை அடையும் போது தென் பசிபிக் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கக்கூடாது.
எனவே, விண்கலம் பூமியை அடையும் நாள், பூமிக்கு வரும் பாதை போன்ற பல தகவல்கள் ரஷியாவிடம்கேட்கப்பட்டுள்ளன. அதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் எனதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications