பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியம் விற்ற பெண்ணுக்கு சிறை
டெல்லி:
1994 ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவ ரகசியத் தஸ்தாவேஜூகளைக் கொடுத்ததுதொடர்பாக இந்தியப் பெண்ணுக்கு ஆறு வருட கடுங்காவல் விதித்துத் தீர்ப்பளித்தது டெல்லியிலுள்ள நீதிமன்றம்.
உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகரைச் சேர்ந்தவர் ஜஹான் அரா. இந்திய ராணுவ ரகசிய தஸ்தாவேஜூகளைபாகிஸ்தானுக்குக் கொடுத்தது தொடர்பாக இவர் 1994 ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இரண்டு கையெறி வெடிகுண்டுகளும் இருந்தன. இவர் டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதி அருகேயுள்ளஹோட்டல் ஷானில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இவரது வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி வி.கே.ஜெயின்இவருக்கு ரூ 5,000 அபராதமும், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
முன்னதாக, போலீஸ் விசாரணையில் அரா கூறுகையில், நான் பாகிஸ்தானில் கலோனல் மாலிக் என்பவரை சந்தித்துஇந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்தேன். இதற்காக அவர்கள் எனக்கு பணமும், துணி வகைகளும்கொடுத்தார் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.