For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுடன் பல கட்சித் தலைவர்கள் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கம்யூனிஸ்ட் கட்சித் த லைவர்கள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமைசந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, தியாகராஜன், தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவுடன்வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரதராஜன் பேச்சுவார்த்தையில்பங்கேற்றார்.

தாங்கள் கோரும் தொகுதிகள் குறித்து அவர்கள் ஜெயலலிதாவுடன் விவாதித்தனர். ஏற்கன வே ஜெயலலிதா அறிவித்த தொகுதிப்பங்கீடு தொடர்பாக இரு கட்சியினரும் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்காக ஜெயலலிதாவும் அவர்களை குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் மீண்டும் அவர்கள் ஜெயலலிதாவுடன் பேச்சுநடத்தியுள்ளனர்.

இவர்கள் தவிர வேறு பல தோழமைக் கட்சித் த லைவர்களும் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தினர். பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில்சந்தானம், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் வடி வேலு, இந்திய தேசிய லீக் சார்பில் அப்துல் லத்தீப் ஆகியோரும் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X