For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.கவில் கரு நாகங்கள்...வைகோ

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

ம.தி.மு.க.வின் முடிவுகள் நாட்டு நலனை அடிப்படையாக கொண்டது என்கிறார் ம.தி.மு.க.வின் தலைவர் வைகோ.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி வழங்கும் விழாவில் பேசிய வைகோ, கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல்படுத்திய பலநல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் வக்கீல்களாக நாங்கள் இருக்கிறோம்.

தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தி தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் தான். வாக்களிக்காதவர்களை தண்டிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.இது தொடர்பாக தனி நபர் மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளேன்.

கடந்த காலத்தில் அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்காக பல்வேறு வகையில் உழைத்தோம். அதற்கான பலனை முழுவதுமாக அனுபவித்ததுதி.மு.க.வே.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். புரட்சிதலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சியில் சில கருநாகங்கள் புகுந்துவிட்டன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X