உண்மை பேசும் அரசியல்வாதி!
சென்னை:
மத்திய சென்னையின் முன்னாள் எம்.பியான அன்பரசு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவர். எப்போதும் புன்சிரிப்புடன் இருக்கும் அரசியல்வாதி.தமிழகத்தில், காங்கிரசின் பரிதாப நிலையை அவர் வயாலேயே கேட்போமா!
அவர் சொல்கிறார்,
அ.தி.மு.க. கூட்டணியில் சேராமல், காங்கிரஸ் 3வது அணி அமைத்து போட்டியிட்டால் டெபாஸிட் கூட கிடைக்காது.
தமிழக அரசியலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு பிடிக்காதவர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்களின் நண்பராக இளங்கோவன்இருப்பதால், காங்கிரஸ்-அதிமுக கூட்டணி உருவாகாமல் இருக்கிறது.
இளங்கோவன் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை. எனவே, காங்கிரஸ் -அதிமுக கூட்டணி உருவாக தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனைநீக்க வேண்டும் என சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்துவிட்டு வந்துள்ளேன்.
தமிழக தேர்தலில் காங்கிரஸ் 3வது அணி அமைத்து போட்டியிட்டால் டெபாஸிட் கூட கிடைக்காது. (அட, உண்மை பேசும் அரசியல்வாதி)
வாழப்பாடிக்கு தேவை தேர்தல் சீட். அதற்காக அவர் ஒவ்வொரு கட்சியாக அலைந்து கொண்டிருக்காமல் காங்கிரஸிற்கு வந்தால்ஏற்றுக்கொள்வோம்.