கோவை குண்டுவெடிப்பு தனிநீதிமன்ற நீதிபதி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் மாற்றப்பட்டுள்ளார்.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் நீதிபதியாக தணிகாசலம்பதவி வகித்து வந்தார்.
கோவை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த சொக்கலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வில் சென்று விட்டார். அதனால்,கோவை மாவட்ட நீதிபதி பொறுப்பையும் தணிகாசலம் கவனித்து வந்தார்.
தற்போது, நீதிபதி தணிகாசலம் தனி நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தனி நீதிமன்ற நீதிபதியாக சென்னை நகர சிவில் நீதிமன்ற முதலாவது கூடுதல் நீதிபதி செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications