கற்பூரத்தின் விலை கிடுகிடு உயர்வு
கோவை:
கச்சாப் பொருட்களின் தட்டுப்பாட்டால் கற்பூரத்தின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களால் இந்த விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கோயில்களில் தீபாராதனைக்குப் பயன்படுத்தப்படும் கற்பூரம் சிறிய அளவுடையது தான். ஆனால் இந்தியா முழுவதிலும் உள்ளகோயில்களில் ஆண்டுக்கு 7,000 டன் கற்பூரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கற்பூரம் தயாரிக்க பெரிய தொழிற்சாலைகள் இந்தியாவில் நான்கு மட்டுமே உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்துதான் குடிசைத் தொழிலுக்கு கற்பூரம் அனுப்பப்படுகிறது.
இதற்கான கச்சாப் பொருள் சீனா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள பைன் மரங்களிலிருந்து கிடைக்கிறது.இந்தியாவில் போதிய அளவில் இந்த மரங்கள் இல்லாததால், இந்தியாவில் கச்சாப் பொருளுக்குத் தட்டுப்பாடு உள்ளது.
இப்போது கற்பூரத்திற்கான கச்சாப் பொருட்கள் 50 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, கற்பூரத்தின் விலையும் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications