த.மா.கா.வில் அதிருப்தி: எம்.எல்.ஏ. விலகல்
சென்னை:
அதிமுகவுடன், தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. அக்கட்சியின் சென்னைஎம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகி விட்டார்.
அதிமுகவுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வெள்ளிக்கிழமைகூட்டணி தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதை கட்சித் தலைவர் மூப்பனார்வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆரம்பம் முதலே த.மா.கா.வில் சிலர் அதிமுக கூட்டணிக்கு எதிராக இருப்பதாகக்கூறப்பட்டது. ஆனால் அதை த.மா.கா தலைமை மறுத்து வந்தது. இந்த நிலையில்,த.மா.கா.வின் சென்னை வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆரூண் கட்சியிலிருந்துவிலகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஐக்கியஜமாத் அமைப்புடன் திமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், த.மா.கா தோன்றியதற்கானநோக்கத்தை மறந்து விட்டார்கள். தன்மானத்தை இழந்து குறைந்த தொகுதிகளுடன்திருப்திப்பட்டுள்ளார்கள். மேலும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இடம் மட்டுமேஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அகில இந்திய அளவிலான முஸ்லீம் லீக்கட்சிக்கு ஒரு இடம் என்பது கேவலமானது.
எனது விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் மூப்பனாருக்கு அனுப்பியுள்ளேன்.பாரம்பரியம் மிக்க அரசியல் தலைவரான மூப்பனாரை விட்டு விலகி வருவது மனவருத்தத்தைத் தந்துள்ளது. மூப்பனாரால் மதச்சர்பற்ற அணி (அதிமுக அணி) என்றுகூறப்படுபவர்கள் கடந்த காலத்தில் பாரதீய ஜனதாக் கட்சியினர் ஆட்சிக்கு வரக்காரணமாக இருந்தவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
திமுக கூட்டணியில் எனக்கு, அப்துல் லத்தீபுக்கு தந்தது போல மரியாதை தருவதாகமுதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்திற்கும்,திமுகவிற்கும் இடையிலான நீண்ட நெடிய உறவு வலுப்படுகிறது என்றார் ஆரூண்.












Click it and Unblock the Notifications