ஒரு கல்யாணம்.. ஒரு கலாட்டா.. 6 பிணங்கள்
கோலாலம்பூர்:
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகே திருமண ஊர்வலமும், சவ ஊர்வலமும் ஒரே இடத்தில் நடந்த போது வெடித்த இனக் கலவரத்தில் 5 பேர்கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓல்டு க்ளாங்க் ரோட்டிலுள்ள மேதான் கிராமத்தில் ஏற்பட்டஇனக்கலவரத்தையடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் ஆபரேஷன் மேதான் என்ற தாக்குதல் நடத்தினர். போலீசார், இதுவரை 154பேரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்பகுதியில் கலவரம் நடந்து வருவதால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலவரப் பகுதியான மேதானிலிருந்துவெளியேறி வேறு இடங்களில் புகலிடம் தேடிச் சென்றுள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் வியாழக்கிழமை இப்பகுதியில் மலாய் இனத்தவர் ஒருவரின் திருமண ஊர்வலம் நடந்த இடத்தில் இறந்த இந்தியர் ஒருவரின் சவஊர்வலமும் நடந்தது. அப்போது, திருமண ஊர்வலத்தை வேறு வழியாகச் செல்லுமாறு, இந்தியர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு மலாய் இனத்தவர்மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கலவரம் மூண்டது. இரு தரப்பினரும் இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றை வைத்துத் தாக்கிக் கொண்டனர். இந்தத்தாக்குதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.
யு.என்.ஐ.