தி.மு.க.வுடன் சேரமாட்டோம் புதிய நீதிக்கட்சி அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வுடனோ அல்லது தி.மு.க வுடனோ நாங்கள் சேர மாட்டோம். மூன்றாவது அணிதான்அமைப்போம் என்று புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் 3 வது அணி அமைக்க காங்கிரஸ் மிக ஆவலுடன் இருந்தது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் என்னை 3முறை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இல்லாமல் புதிய நீதிக்கட்சியுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாகஇருந்தார்.
இருப்பினும், மூப்பனார் அ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிடத் தயாரான போதும் கூட, ஆசாத் மூன்றாவது அமைத்து விடுவதில்தீவிரமாக இருந்தார்.
சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணியுடன் இணைந்துள்ளது. மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டால் கண்டிப்பாக புதியநீதிக்கட்சி 70 முதல் 80 இடங்களைக் கைப்பற்றும்.
நாங்கள் கண்டிப்பாக மூன்றாவது அணி அமைத்தே தீருவோம். வரும் 15 ம் தேதி இதுகுறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
யு.என்.ஐ.