For Daily Alerts
Just In
35 தொகுதிகளில் ஜெயிப்போம் .. திருநாவுக்கரசு
சென்னை:
தி.மு.க கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகள் கோருவோம் என்றுஎம்.ஜி.ஆர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 35 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று அடையாளம் கண்டுள்ளோம்.
கடந்த தேர்தலில் போட்டியிடதை விட கூடுதலான தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்.
ஜெயலலிதாவால் நல்லாட்சி தர முடியாது. பாண்டிச்சேரியில் பா.ம.க.வுடன் செய்துள்ள ஒப்பந்தம் மூலம், கூட்டணிஆட்சிக்குத் தயார் என்பதையே ஜெயலலிதா உணர்த்தியுள்ளார்.
3-வது அணி அமையும் வாய்ப்பில்லை. அப்படி 3-வது அணி அமைக்க முயலும் கட்சிகள் தி.மு.க கூட்டணியில்இணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு முயல வேண்டும் என்றார் அவர்.
Comments
Story first published: Monday, March 12, 2001, 5:30 [IST]