லாகூர்: முஸ்லீம்கள் மீது தாக்குதல் .. 7 பேர் பலி
லாகூர்:
லாகூர் மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் இறந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப்பும், உள்துறை அமைச்சர் மொய்னதீன் ஹைதரும் லாகூர் சென்றிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானிய அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவலில், கடந்த மார்ச் 4ம் தேதி சிறுபான்மை ஷியா முஸ்லீம்கள் 12 பேர்சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பெரும்பான்மை சமூகமான சன்னி முஸ்லீம்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம்என கருதப்படுகிறது.
திங்களன்று இரவு 7மணி தொழுகைக்கு மக்கள் கூடியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய இருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 7பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனதெரிவித்தனர்.
சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானின் இந்த இரு சமூகத்திற்குமிடையே நடைபெற்றுவரும் இன மோதலில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர் பலியாகிவருகின்றனர் என குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications