ஊழல் எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
ஆயுத பேர ஊழல் தொடர்பான அமளியை அடுத்து மாநிலங்களவை புதன்-கி-ழ-மை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையும் மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியான ஆயுத பேர ஊழலில் பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள்சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஊழலுக்-குப் பொறுப்பேற்று பிரதமர் வாஜ்-பாய் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மக்களவை சபாநாயகர்ஜி.எம்.சி.பாலயோகி, உறுப்பினர்களை அமைதியாக இருக்கும் படி கோரியும் அமைதி திரும்பாததால் மக்களவையை மதியம் 1 மணி வரை ஒத்திவைத்தார்.
மத்திய அரசு, ஊழலுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்ககட்சியினர் கோஷம் எழுப்பினர்.எதிர்க்ககட்சியினரின் அமளியில் சபையை தொடர்ந்து நடத்த முடியாததால் நாள் முழுவதற்கும் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர்கிருஷ்ண காந்த் அறிவித்தார்.
யு.என்.ஐ.