அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க பாமக தீர்மானம்
சென்னை:
சென்னையில் புதன்கிழமை நடந்த பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் பு.த.இளங்கோவன், பொன்னுசாமி, டாக்டர்ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த பாட்டாளிமக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை பா.ம.கவின் பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ராமதாஸ் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் பொன்னுசாமி பேசுகையில்,
க்லைவர் ராமதாஸ் எடுக்கும் முடிவுகள் கட்சியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள்வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
றுபாதுக்குழுக் கூட்டத்தில் ணஇன்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்குத் தடை விதிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும்வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில் ஜி.கே.மணி, பொன்னுசாமி, இளங்கோவன் ஆகியோர் மீண்டும் நிர்வாகிகளாகத்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications