விரைவில் புலிகளுடன் பேச்சுவார்த்தை: இலங்கை அரசு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக அடுத்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை வெளியுறவுத்துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இதுவரை இலங்கை அரசும், புலிகளும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் நார்வே மேற்கொண்டு வருகிறது.

அடுத்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளை சந்தித்துப் பேச இலங்கை அரசு தயாராகி விட்டது. இலங்கைப் பிரச்சனை விரைவில் சுமூகமாக முடிவடையும்.

இதுவரை இலங்கை அரசு எவ்வித முறையான பேச்சு வார்த்தையையும் தொடங்கவில்லை. புலிகளுடன் நேருக்கு நேராகச் சந்தித்துப் பேச இலங்கை அரசுதயாராக இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறோம்.

தற்போது நார்வே சமரசக் குழுவினர் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்தது புலிகள்இயக்கத்துக்குக் கிடைத்த பேரிடி.

விரைவில் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+