For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் பங்காரு, வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

ஆயுத பேர ஊழல் தொடர்பாக பதவி விலகிய பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண் மற்றும் பிரதமர் வாஜ்பாய்ஆகியோருடைய உருவ பொம்மைகளை ஆந்திர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எரித்தனர்.

புதன்கிழமை ஹைதராபாத்தில் நிருபர்களிடம் ஆந்திர பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாகர் ரெட்டிகூறியதாவது:

இந்த ஊழலின் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்த ஊழலில்ஈடுபட்டுள்ளது நாட்டிற்கு பெரிய அவமானம். இதற்கு பொறுப்பேற்று வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுபதவி விலக வேண்டும்.

ஆந்திராவில் பெட்ரோல் மற்றும் டீசல் டீலர்ஷிப், கேஸ் ஏஜென்ஸி அமைப்பதற்கு பா.ஜ.க.வின் பங்காருலஷ்மணனிடம் பலர் பணம் கொடுத்துள்ளனர்.

இவர்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாரியம் நிராகரிக்கவில்லையெனில், ஆந்திராவின் இளைஞர்காங்கிரசார் தங்களது போராட்டத்தை தொடருவர் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X