ஒரே நாளில் 24 விழாக்கள்: அமைச்சர் சாதனை
கோவை:
ஒரே நாளில் 24 இடங்களில் கலந்து கொண்டு விழாக்களை முடித்துள்ளார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.
தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்குள் விழாக்களை முடிக்க வேண்டும் என்ற நிலையில், தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஒரே நாளில் 24விழாக்களில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் காலை 10 மணிக்குத் துவங்கிய விழா இரவு வரை நீடித்தது. இதில் மாவட்ட கலெக்டர் கலந்துகொள்ள இயலாததால் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,அனைத்து விழாக்களுக்கும் தலைமை ஏற்று நடத்தினார்.
காரமடை, சிறுமுகை நகராட்சிப் பகுதிகளில் 24 நலத்தி ட்டங்கள், பல்வேறு இடங்களில் அடிக்கல் நாட்டு விழாக்கள், என கோவை மாவட்டமேசெவ்வாய்க்கிழமையன்று அமர்க்களப்பட்டது.
மேடூர், கண்டியூர், சீனியூர், பள்ளேபாளையம், ஆகிய இடங்களில் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா, நீண்ட நாள் கோரிக்கையில் இருந்த நெல்லித்துறையில் பவானிஆற்றின் மீதான பாலம் திறப்பு விழா உள்பட பல நிகழ்ச்சிகளில் அமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டார்.
மேலும், சிறுமுகை இரண்டாவது குடிநீர் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இந்த விழாக்கள் அனைத்தையும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே நடத்திவிட வேண்டும் என்ற வேகம் தான் அமைச்சரின் சாதனைக்கு காரணமாகும்.
மேலும், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவும் இந்த விழாக்கள் சந்தர்ப்பமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications