ஜனநாயகத்துக்குப் பேராபத்து: சங்மா
கவுஹாத்தி:
பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமண் மேல் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு நாட்டின் ஜனநாயகத்தையேசீர்குலைத்து விடும் என்று நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பங்காரு லட்சுமண் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தெகல்காடாட் காம் வெளிக் கொண்டு வந்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டு நாட்டின் எதிர்காலத்திற்கு பங்கம்விளைவிப்பதாகும்.
இந்திய அரசியலையே கூறு போடும் விவகாரமாகும். மக்கள் இனிமேல் அரசியல் கட்சிகளையே நம்பாத நிலைஏற்படும். ஜனநாயகத்துக்குப் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து விளைவித்து விட்டார்கள் பாரதிய ஜனதா கட்சியினர்.
நாட்டிற்கு ஆயுதம் வாங்குவதிலேயே ஊழல் புரியத் தொடங்கி விட்ட ஒரு கட்சி வேறு எல்லாத் துறையிலும்ஊழலில் ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு சங்கமா கூறினார்.
சங்மா முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கரஸ்கட்சியின் பொதுச் செயலாளர்.
முன்னதாக, இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக பங்காரு லட்சுமண் மேல்குற்றம் சுமத்தியது தெகல்கா நிறுவனம்.
இந்த விஷயத்தை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அம்பலமாக்கி, வாஜ்பாய்உடனடியாக அறிக்கை தாக்குதல் செய்ய செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் ராஜினாமா செய்தார்என்பது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications