For Daily Alerts
Just In
3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா நிராகரிப்பு
டெல்லி:
மத்திய அமைச்சர்கள் நிதிஷ்குமார், ஸ்ரீநிவாஸ் பிரசாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோரின் ராஜினாமாவை தேசியஜனநாயகக் கூட்டணி நிராகரித்தது.
இவர்கள் மூவரும் ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியை சேர்ந்தவர்கள். பெர்னாண்டஸ் ஏற்கனவே ராஜினாமாசெய்துவிட்டார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
ஆனால், வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இக்கூட்டணியின் கூட்டத்தில் சமதா கட்சியை சேர்ந்த மற்ற 3 மத்தியஅமைச்சர்களின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டது.
மேலும், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், தேசிய ஜனநாயக கூட்டணியின்அமைப்பாளராக தொடர்ந்து செயலாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் ராஜினாமாவை அடுத்து ரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களின் பொறுப்பை பிரதமரே ஏற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, March 17, 2001, 5:30 [IST]