பாதுகாப்புத்துறை அமைச்சராகிறார் ஜஸ்வந்த்சிங்
டெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பாதுகாப்புத்துறையையும் சேர்த்துக் கவனித்துக் கொள்வார்என்று மத்திய அரசு செய்திக் குறிப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
ஆயுதப் பேர ஊழல் புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்துபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாயிடம் பாதுகாப்புத்துறையை வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் ஒப்படைக்குமாறு கூறினார். இதையடுத்து பாதுகாப்புத்துறை ஜஸ்வந்த் சிங்கிடம்ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்ததையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சகப் பொறுப்புக்களைபிரதமர் வாஜ்பாய் தற்காலிகமாக கவனித்துக் கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.