பிரச்சாரக் களத்தில் தமிழ் தேசியக் கட்சி
கோவை:
சிங்காநல்லூர் தொகுதியில் தமிழ்தேசியக் கட்சி ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தை துவங்குகிறது.
கொங்கு வேளாளாக் கவுண்டர்கள் பேரவை சார்பில் துவங்கப்பட்ட தமிழ் தேசியக் கட்சி, அ.தி.மு.க, தி.மு.க அணிஆகியவற்றுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்சி 30 தொகுதிகளில் செல்வாக்குள்ளதாகவும், இவற்றில் சில தொகுதிகளில் போட்டியிடவும் முடிவுசெய்துள்ளது. இந்த முடிவின்படி, கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து பிரச்சாரத்தைதுவக்கவுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவைமாவட்டத்தில், பல்லடம், பொங்கலூர், பொள்ளாச்சி, சிங்காநல்லூர் தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மார்ச் 18 ல் பிரச்சாரத்தை மாலை 4 மணிக்கு துவக்கப்படும். பீளமேட்டில் இந்தபிரச்சாரம் துவங்குகிறது. தேர்தலில் இக்கட்சியின் சார்பாக போட்டியிடுவோர் வரும் 21ம் தேதி வரை மனுச்செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications