எங்களை புலனாய்வு செய்கிறார்கள்: டெஹல்கா குற்றச்சாட்டு
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள், எங்களது பணியைத் தொடர்ந்து செய்யவிடாதவாறு கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று டெஹல்கா டாட் காம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆயுதப் பேர ஊழலை அம்பலமாக்கியது டெஹல்கா டாட் காம். இதையடுத்து லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் மற்றும் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லிஆகியோர் ராஜினாமா செய்தனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசும் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, பிரமதரின் முதன்மை செயலாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான பிரிஜேஷ் மிஸ்ராவுக்கும்ஆயுதப் பேர ஊழலில் தொடர்பு உள்ளது என்று டெஹல்கா டாட் காம் இன்டர்நெட் அலுவலக முதன்மைஎழுத்தாளர் தருண் தேஜ்பால் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசு மீது ஆயுதப் பேர ஊழலை ஆதாரத்துடன் டெஹல்கா டாட் காம் கூறியது.
இதையடுத்து டெஹல்கா டாட் காம் நிருபர்களால் பணியை ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லை. அவர்களுக்குப்பாதுகாப்பு இல்லை. அதுதவிர மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
டெஹல்கா டாட் காம் அலுவலகத்தை பரிசோதனை செய்யுமாறு மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறைஅதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தொடர்ந்து, அனைத்து அரசியல்வாதிகளாலும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு வருகிறோம்.சனிக்கிழமை எங்களுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவுத்துறையினர் பணம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இப்போது பிரதமர் வாஜ்பாய் அலுவலக அதிகாரிகள் எங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் எங்களைத் தொடர்ந்துசோதனை செய்து வருகிறார்கள். எங்களுக்குத் தெரியாமல் எங்களைக் கண்காணித்து வருகிறார்கள்.
டெஹல்கா நிருபர் மாத்யூ சாமுவேலை சிலர் தாக்கும் எண்ணத்துடன் அணுகியிருக்கிறார்கள். அவர்தப்பித்ததையடுத்து அவரை மூளைச்சலவை செய்யும் நடவடிக்கைகளிலும் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நாங்கள் புலனாய்வு செய்திகளைக் கொடுத்து வருகிறோம் என்பதால் கடந்த அக்டோபர் மாதம் முதல் எங்களுக்குப்பல வகைகளில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள்கண்காணிக்கப்படுகின்றன.
இவ்வாறு தருண் தேஜ்பால் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.