இன்றைய தினப்பலன்
அந்தப் பேச்சை அவர் ஆரம்பித்திருந்தால், நானும் என் கருத்தைச் சொல்லத்தொடங்கியிருப்பேன்.ஆனால் அந்தப் பேச்சே எழவில்லை.
இந்த நிலையில்தான் பத்திரிக்கைச் செய்திகள் பலவிதமாக வெளியாகத்தொடங்கின.பா.ஜ.க.வுடன் நட்பு தேட, சோவின் உதவியை ஜெயலலிதா நாடினார்.
ரஜினியுடன் சமாதானம் பேச சோவின் உதவியை ஜெயலலிதா கேட்டார்:த.மா.கா.வுடன் பேசி, தனது கூட்டணியில் அக்கட்சியை உறுதிப்படுத்துவதற்காக,சோவை ஜெயலலிதா சந்தித்தார்.
வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஆராய சோவுடன்ஜெயலலிதா பேச்சு நடத்தினார் ... என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.
உண்மையுடன் சிறு தொடர்பும் இல்லாத இவற்றை எல்லாம் மறுத்து, நான் பேட்டிகள்அளித்தேன். இதிலெல்லாம் துளியும் உண்மை இல்லை என்பதை விளக்கினேன்.
ஆனால் இது மாதிரி செய்திகள் வெளியாவது நிற்கவில்லை. இதற்கு சில காரணங்கள்உண்டு.சில பத்திரிக்கைகள் ஏதோ நடக்கிறது என்று உண்மையாகவேநம்பியிருக்கலாம்.
நான் காமராஜ் காலத்தில், இந்திரா காந்தியைச் சந்தித்து சில கருத்துக்களை பேசியவன்:இரு காங்கிரஸும் இணைய முயற்சித்தவன்: மொரார்ஜி. சரண்சிங் இடையேஏற்பட்டுவிட்ட இடைவெளியை நீக்க முயற்சித்தவன்.
ஜனதா மந்திரிசபை கவிழாமல் இருக்க, எம்.ஜி.ஆர்., தேவராஜ் அர்ஸ்போன்றவர்களின் ஆதரவை நாடியவன்: மொரார்ஜிக்கு எம்.ஜி.ஆரின் ஆதரவைப்பெற்ற பிறகு, ஜெகஜீவன்ராமுக்கும் அவர் ஆதரவைப் பெற்றவன்.
என்.டி.ஆர். மந்திரி சபை டிஸ்மிஸ் ஆன பிறகு, மீண்டும் பதவிக்கு வர அவருக்குதுணையாக இருந்தவர்களில் நானும் ஒருவன்.
எதிர்க்கட்சி அரசியல் நடத்தத் தொடங்கிய வி.பி.சிங், தான், பிரதமாவதற்குத்தான்முனைந்திருக்கிறாரே தவிர, ஜனதா தலைவர் எவரும் பிரதமராவது அவருடையவிருப்பம் அல்ல என்று ஜனதா கட்சி தலைவர்களை நம்ப வைக்க முயற்சித்துதோற்றவன்.












Click it and Unblock the Notifications