இன்றைய தினப்பலன்
சோவை முதல்வராக்க ஜெயலலிதா முனைந்து மூப்பனாரின் ஒப்புதலையும்பெற்றிருக்கிறார் என்று ஒரு செய்தியை உளவுத்துறை, நிருபர்களிடையே பரப்பிவருகிறது - என்று ஒரு முக்கிய பத்திரிக்கையின் நிருபரே என்னிடம் கூறினார்.
பின்னர் அதன்படியே செய்தியும் வந்தது. ஒட்டு மொத்தமாக ஜெயலலிதா அணியில்பலருடைய சந்தேகத்தையும் கிளப்பி விட்டு விட்டு, அந்த அணியை பிளக்க - இச்செய்தி உதவும் என்று நம்பியவர்கள் செய்த கைங்கர்யம் இது.
இதற்கிடையில் நான் என்னுடைய வழக்கம் போல் மூப்பனார், ரஜினிஆகியோருடனும், இப்போது மீண்டும் வந்திருக்கிற வழக்கத்தின் படிஜெயலலிதாவுடனும் பேசிக் கொண்டிருந்தேன்.
இப்படி பல செய்திகள், பல நோக்கங்கள்காரணமாக வெளியாகிக் கொண்டிருந்தநிலையில், இச் செய்திகள் பற்றியும் எங்களிடையே பேச்சு வந்தது. முதலில் சிரித்துவிட்டு விடக்கூடிய விஷயமாக இருந்தது.
ஆனால் போகப் போக இதன் விளைவுகள் எப்படியிருக்குமோ என்ற கவலைமற்றவர்களுக்கு வந்தது. எனக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லாவிட்டாலும்,மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு, என்னையும் இந்தச் செய்திகள்பற்றியெல்லாம் பேச வைத்தது.
இச் செய்திகள் பற்றி பேசியதால், தமிழக அரசியல் பற்றியும் நாங்கள் பேசுவது தவிர்க்கமுடியாததாகி, அது பற்றியும் பேசினோம். ஆனால், எந்த ஓர் உதவியும் என்னிடம்நாடப்படவில்லை.
தமிழக அரசியல் நிலை பற்றி என்னுடைய கருத்துக்களை தாராளமாகமூப்பனாரிடமும், ஜெயலலிதாவிடமும் எடுத்துச் சொன்னேன்.
வெவ்வேறு கட்சிகளின் பலங்கள்: அணிகளின் எவ்விதமாக அமைந்தால் யாருக்குஎன்ன பயன் இருக்கும்: இரண்டு பெரிய அணிகளில் என்ன மாறுதல் உருவானால்யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்: மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது - என்பதுபற்றியெல்லாம் என் அபிப்பிராயங்களை மூப்பனாரிடமும், ஜெயலலிதாவிடமும்,வரித்தேன்.












Click it and Unblock the Notifications