மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தார் தலைமை நீதிபதி
டெல்லி:
ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க பணியில் இருக்கும் நீதிபதியை நியமிக்கமுடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
தெஹல்கா டாட் காம் நிறுவனம் பல அரசியல் தலைவர்கள் ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. இது குறித்து பிரதமர் வாஜ்பாய் பதவி விலகவேண்டும் என எதிர் கட்சிகள் வற்புறுத்தி வந்தன.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணைநடத்தப்படும் என மத்திய அரசு எதிர் கட்சிகளுக்கு உறுதியளித்திருந்தது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீபதி ஒருவரைநியமிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
பதவியில் இருக்கும் எந்த நீதிபதியையும், இது போன்ற விசாரணைக்காக நியமிப்பதுவழக்கத்தில் இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் மத்திய அரசுக்குதெரிவித்துள்ளார்.
இப்போது தனி நபர் கமிஷன் ஆயுத பேர ஊழல் விசாரணையை மேற்கொள்ளும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் நடத்தி வரும்ஆர்ப்பாட்டதின் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக நாடாளுமன்றநடவடிக்கைகள் பாதிக்கபட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications