ஓட்டு கேட்பவரிடம் சொத்து விபரம் கேளுங்கள்: சேஷன்
சென்னை:
ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களிடம் சொத்து விபரம் கேட்கச் சொல்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்.
தேர்தலில் பொதுமக்களின் பொறுப்பு என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சேஷன். அப்போது அவர்தெரிவித்த கருத்துகள்:
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளரிடம் அவருடைய சொத்து விபரம் என்ன என்பதை பொதுமக்கள் கேட்க வேண்டும்.மற்றவர்களிடம் ஆலோசித்து நல்ல வேட்பாளரை முடிவு செய்யலாம்.
சாதி அமைப்புகளின் மூலம் சாதி ஓட்டுகளை பெற முடியும் என அரசியல்வாதிகள் நினைப்பதால் சாதிக்கட்சிகள் பெருகிவிட்டன.
அனைவருக்கும் அடையாள அட்டை அளித்த பின்பு தேர்தலில் அவற்றை பயன்படுத்த கட்டாயப் படுத்தலாம். அதற்கு முன்னால், அதனை தேர்தல் ஆணையம்கட்டாயப்படுத்தினால் நீதிமன்றம் சென்று உரிய நீதி பெறலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை (எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்தலாம். அவற்றிலும்தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.