For Daily Alerts
Just In
சென்னையில் 3 மாணவர்கள் மாயம்
சென்னை:
சென்னையில் ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷஷாங் (13), விஜயகுமார், சுரேஷ்குமார். 3 பேரும் முகில் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில்8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
3 பேரும் நண்பர்கள். இவர்கள் திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் சேர்ந்து விளையாடுவதற்காகச் சென்றனர்.
ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பயந்து போன மாணவர்களின் பெற்றோர்கள் சூளைமேடு போலீஸில் நிலையத்தில் புகார்கொடுத்தனர்.
சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவர்களைத் தேடி வருகின்றனர். ஒரே பள்ளியின் 3 மாணவர்கள் திடீரென மாயமானதால் சென்னையில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, March 20, 2001, 5:30 [IST]