டெல்லி விரைந்தார் புதுவை காங்.தலைவர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது என்பது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் ஆலோசனை நடத்துவதற்காக பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி வியாழக்கிழமை டெல்லி விரைந்துள்ளார்.
டெல்லி செல்லுமுன் பாண்டிச்சேரியில் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக எம்.பி. ஓ.எச்.பரூக், பாண்டிச்சேரி முன்னாள்முதல்வர் வைத்தியலிங்கம் ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்று விட்டனர். தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் சண்முகம்வெள்ளிக்கிழமை டெல்லி செல்லவுள்ளார். நாங்கள் காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத்திடமும் ஆலோசனை நடத்துவோம்.
தொகுதிப்பங்கீட்டில் பாண்டிச்சேரி காங்கிரஸ் எவ்வித சமாதானமும் செய்து கொள்ளாது என்றார்.
எங்களுக்குத் தெரியாது .. கம்யூ.:
இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கவுன்சில் உறுப்பினர் விஸ்வநாதன், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வும், காங்கிரஸ் கட்சியும்இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நடத்துவார்கள் என்பதை ஒப்புக் கொண்டது குறித்து எங்களுக்குத் தெரியாது.
அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்.
பாண்டிச்சேரியில் திமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே கம்யூனிஸ்ட கட்சியின் நோக்கமாகும் என்றார்.
யு.என்.ஐ.