விழுந்து கொண்டிருக்கிறது மிர் விண்கலம்
மாஸ்கோ:
மிர் விண்கலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு தீப்பிழம்பாகக் கடலில் விழுகிறது.
மிர் விண்கலம் இந்தியாவில் மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் விழும் ஆபத்தும் இருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வான்வெளியில் ஏவப்பட்டது மிர் விண்கலம். இது 140 டன் எடை கொண்டது.
மிர் விண்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விண்கலம் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.பல்வேறு கேளாறுகளால் மிர் நிலை தடுமாறி வந்தது. பொருளாதாரரீதியிலும் இதை வைத்திருக்க ரஷ்யா திணறி வந்தது. இதையடுத்து அதை அழித்துவிடரஷ்யா முடிவு செய்தது.
அதை பசிபிக் கடலில் மூழ்கடிக்கத் திட்டமிடப்பட்டது. 220 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள மிர் விண்கலத்தை பூமிக்குக் கொண்டு வரும் பணிவெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. மிர்விண்கலத்தை கடலில் விழ வைப்பதற்காக அத்துடன் ஒரு சரக்கு ராக்கெட்டும் இணைக்கப்பட்டுள்ளது.
எப்போது விழுகிறது மிர்விண்கலம்?
ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளபடி மிர்விண்கலத்தை விழ வைக்கும் முயற்சிகள் சரியாக நடைபெற்றால் இந்திய நேரப்படி சரியாக 11.50 மணி முதல் 12.00மணிக்குள் அது கடலில் விழுகிறது.
இப்போது அது பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது. 2,732 டிகிரி வெப்பத்துடன் படுவேகத்தில் அது வந்து விழும்.