கோவையில் மார்ச் 31 ல் கார்பந்தயம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் சர்வதேச கார் பந்தயம் இம்மாதம் மார்ச் 31ம் தேதி துவங்குகிறது. இரண்டு நாட்கள் இந்தப் பந்தயம் நடக்கிறது.

கோவையில் சர்வதேச கார் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஸ்பிட்பயர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பாலமுருகன், கோபிநாத் ஆகியோர்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கோவையில் மார்ச் 31 ம் தேதி இரண்டு நாள் சர்வதேச கார்ப் பந்தயம் தொடங்குகிறது. இந்தப் பந்தயம் 150 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.கோவை கொடீசியா மைதனாத்தில் கார்ப் பந்தயம் துவக்கி வைக்கப்படும்.

காலை 10. 30 மணிக்கு தொடங்கி பல்லடம் வழியாக கேத்தனூர் மெயின்ரோடு வழியாகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், காற்றாலைகள்இடையே அமைக்கப்பட்டுள்ள பந்தயப் பாதையில் கார்கள் செல்லும்.

இப் போட்டியில் சர்வதேச கார்ப் பந்தய வீரர்கள் 30 பேர் கலந்து கொள்கின்றனர். 10 பேர் வெளிநாட்டினர். 8 பேர் வெளிநாட்டுக் கார்களையும், 2 பேர்இந்தியக் கார்களிலும் பந்தயத்தில் கலந்து கொள்கின்றனர்.

4 கட்டமாக நடத்தப்படும் இந்தப் பந்தயத்தில் மலேசியா, தாய்லாந்து, சீனா, இந்தோனேஷியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்கின்றனர். கோவையையடுத்து இந்தப் பந்தயம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு ரொக்கப்பரிசாக ரூ 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மொத்த பரிசுத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.பந்தய ஆலோசகராக ஆஸ்திரேலியா நாட்டு பால் வில்லன்ஸ் கலந்து கொள்கிறார் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+