வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தாதீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசுவாமி கூறியுள்ளார்.

சனிக்கிழமை நடந்த புதிய தமிழகத்தின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிவைேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துநிருபர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசுவாமி கூறியாதாவது:

தமிழகத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.எனவே வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்கக் கூடாது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது.ஏனென்றால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகத்தின் கிராமப் பகுதியில் இருக்கும் வயதானவர்களுக்கும், படிப்பறிவு இல்லாதவர்களுக்கும்மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாது.

கோடை காலம் உச்சத்தில் இருப்பதால் கிராமப் பகுதிகளிலாவது இரவு நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல்ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்நிறைவேற்றியுள்ளோம்.

இரண்டு நாட்களுக்குள் புதிய தமிழகம் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கருணாநிதிஅறிவிப்பார். அதன் பின்பு எங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+