காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பாக்.தயார்
ஜெனிவா:
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகஇருக்கிறோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஜெனிவாவில் நடந்த மனித வள மேம்பாடு குறித்தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் சட்டத்துறைஅமைச்சர் ஷகிதா ஜமீல் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து காஷ்மீரில் அமைதிய ஏற்படுத்துவதே எங்கள்குறிக்கோள்.
அதற்காக, இந்தியாவுடன் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யார் முன்னிலையில்வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்தான் இந்தியா சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளது.சண்டை நிறுத்தம் 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சண்டைநிறுத்தத்தின் போது காஷ்மீரில் மிகவும் குறைவானஅளவிலேயே வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்தது.
சண்டைநிறுத்தம் தேவையில்லாதது. சண்டைநிறுத்தத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதுஎன்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். அப்படி எதுவும் இல்லை. அது தவறான கண்ணோட்டம்.
இந்தியா அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிந்த அளவு துப்பாக்கிச்சூடு,வன்முறை ஆகியவற்றைக் குறைத்துள்ளது பாகிஸ்தான்.
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சண்டைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் வன்முறைச்சம்பவங்கள் பெரும் அளவு குறைந்துள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச பாகிஸ்தான் தயாராகிவிட்டது. இந்தியாதான் பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.