தி.மு.கவுக்கு வாக்களிக்காதீர்கள்: வன்னியர் சங்கம்
சென்னை:
தி.மு.க கூட்டணியில் இருந்த வன்னியர் சங்கம் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.கவை எதிர்க்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில், வன்னிய அடிகளார் தலைமையிலான வன்னியர் சங்கம்அங்கம் வகித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வன்னியர் சங்கம் வரவிருக்கும்தேர்தலில் தி.மு.கவை எதிர்ப்பது என முடிவு செய்துள்ளது.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியும் வன்னியர்சங்கத்தில் அங்கம் வகித்த வருகிறார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் த.ரா.கா. மூன்று தொகுதிகள்கேட்டது.ஆனால் தி.மு.க. 3 தொகுதிகள் கொடுக்க மறுத்து விட்டது.
வன்னியர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை எதிர்க்க வேண்டும் என வன்னியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் தீரனும்வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்து வருகிறார்.
வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், தீரன் ஆகிய மூவரும் பங்கு கொண்ட வன்னியர் சங்க கூட்டத்திற்குபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் கூறியதாவது:
புதிய தமிழகமும், விடுதலை சிறுத்தை அமைப்பும் தென் தமிழ்நாட்டில் மத கலவரங்களுக்கு காரணமாகஇருந்தவர்கள். இவர்களுடன் தி.மு.க கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது. எனவே வன்னியர்கள் யாரும்தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றனர்.
வன்னியர்களும். தலித்களும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications