வீரப்பன் மறைவிடம் முற்றுகை.. டி.ஜி.பி.பேட்டி
சேலம் :
சந்தன வீரப்பனின் மறைவிடம் அதிரடிப்படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரைவில் வீரப்பனைபிடித்து விடுவோம் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், அனந்தனாம்பட்டியில் போலீஸ் குடியிருப்புகளை திறந்து வைத்து பேசுகையில் ராஜகோபாலன்கூறியதாவது:
சந்தன வீரப்பனின் மறைவிடங்கள் சிறப்பு அதிரடிப்படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. விரைவில் வீரப்பனை பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழகத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்காக ரூ 200 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புசெலவுக்காக போலீஸ் குடியிருப்பு கார்ப்பரேஷன் ரூ 5 கோடி வரை செலவு செய்துள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் பணிக்காக 98,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தில்உள்ள மொத்த தொகுதிகளில் 154 தொகுதிகள் பதட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அங்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக ரூ 68 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications