3 வது அணி அமைப்போம்: உ.மு.க. அறிவிப்பு
சேலம்:
தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத 3 வது அணியை அமைக்கப் பாடுபடுவோம் என உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக்கட்சி தெரிவித்துள்ளது.
சேலத்தில் நடந்த இக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் மாநில தலைவர் கோவிந்தராசன்,ராஜேந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சாதிய அரசியல் முன் வரிசைக்கு வந்து விட்டது. திராவிடக் கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் நலனைப் புறக்கணிக்கத்தொடங்கியுள்ளன. நாட்டின் நலன் காக்க அவை எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.
இதற்காக எந்நாளும் செயல்பட்டதில்லை. சில்லறை சலுகைகளை காட்டி உழைப்பாளிகளின் வாக்குகளைக் கவர்ந்துவருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஆளும் கட்சியை தூக்கி எறியவும், ஆட்சி அமைத்துக்கொள்ளவும் அவை போட்டிக் கொண்டு செயல்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே இருக்குமாறுபார்த்துக் கொள்கின்றனர். எனவே, திராவிடக் கட்சிகள் அல்லாத 3 வது அணியை அமைக்கப் பாடுபடுவோம்.அவ்வாறு 3 வது அணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்தால், 10 தொகுதிகளில் சுயேச்சையாகவேபோட்டியிடுவோம் என்றார்.