எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த ஆண்டு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.செவ்வாய்க்கிழமை தொடங்கும் பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 9 ம் தேதி வரை நடைபெறும்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்களில் 3,10,508 பேர் மாணவர்கள். 3,35,726 பேர் மாணவிகள். மொத்தம்6,46,234 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு அட்டவணை:
மார்ச் 27: தமிழ் முதல் தாள்
மார்ச் 28: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 29: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 30: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 2: கணிதம்
ஏப்ரல் 4: அறிவியல்
ஏப்ரல் 9: சமூக அறிவியல்












Click it and Unblock the Notifications