மாவட்ட செயலாளர்களுடன் வைகோ ஆலோசனை
சென் னை:
திமுக கூட்டணியில் தங்களுக்கு வழங்கப்படும் தொகுதிள் குறித்து மதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 21 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் எவை என்பதில்சிக்கல் எழுந்துள்ளது. மதிமுக கேட்கும் சில தொகுதிக ளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டதாக திமுக கூறியுள்ளது.அதற்குப் பதில் வேறு தொகுதிகள் தருவதாக கூறியுள்ளது.
இது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து பேசி கூறுவதாக திமுக தலைமையிடம் வைகோ கூறியிருந்தார்.அதன்படி செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.
இக் கூட்டத்திற்கு வைகோ தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், அவைத் தலைவர்எல்.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தங்கள் வெற்றி வாய்ப்புக்கு உகந்த தொகுதிகள், திமுக தரப்பில் கூறப்படும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பதுகுறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது.