காங்கிரஸ் கட்சியில் தீராத கோஷ்டி பூசல்
மதுரை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நன்றாகத் தேடிப் பார்த்தால் தான் அது இருப்பதே தெரியும். தேய்ந்துபோய்விட்டஅந்தக் கட்சியில் உட்கட்சிப் பூசலுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.
தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலுஆகியோர் ஒன்றாக சேர்ந்து செயல்படுவது போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால், மாவட்ட அளவில்அவர்களது ஆதரவாளர்கள் இன்னும் ஒன்று சேரவில்லை.
மதுரையில் இளங்கோவனின் ஆதரவாளர் காந்தியும், தங்கபாலுவின் ஆதரவாளர் கணபதியும், யார் நகர காங்கிரஸ்தலைவர் என்பதில் மோதி வருகின்றனர்.
இதே போல் இளங்கோவன் ஆதரவாளர் தேவராஜுக்கும், தங்கபாலுவின் ஆதரவாளர் செல்வராஜ்பாண்டியனுக்குமிடையே மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்பது குறித்து பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், ஆயுத பேர ஊழலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கபாலு ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இளங்கோவன்ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்தனர். கோஷ்டி பூசல் அதிகரித்து வரும் மதுரையில் மத்தியதொகுதியைக் காங்கிரஸ் கேட்கிறது.
காங்கிரசுக்கு சீட் கொடுத்து அதில் ஒரு கோஷ்டியினருக்கு சீட் கிடைத்தால் அவரைத் தோற்கடிக்க வேறு அணிகள்தேவையில்லை. எதிர் கோஷ்டியே போதுமானது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.












Click it and Unblock the Notifications