ஸ்பிக் வழக்கு: ஜெவுக்கு இன்னொரு அரசியல் அடி
சென்னை:
ஸ்பிக் பங்கு ஊழல் தொடர்பாக தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றுகோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை முதலாவது தனி நீதிமன்றம்வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஸ்பிக் நிறுவன பங்குகளை வாங்கியதில் ரூ. 30 கோடி அளவுக்கு அரசுக்குநஷ்டம் ஏற்பட்டதாக கூறி சி.பி.ஐ. ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீதுமுதலாவது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதைஏற்ற உயர்நீதிமன்றம், தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த தடை விதித்தது. அதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில்,சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்தது. தனி நீதிமன்றத்தில் விசாரணை தொடரலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து கடந்த 19-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அன்றுஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணையை ரத்து செய்யகோரியிருந்தார்.
ஜெயலலிதாவின் மனுவை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், சுப்ரீம் கோர்ட் இந்தவழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே விசாரணையை ரத்து செய்ய முடியாதுஎன்று கூறி ஜெயலலிதாவின் மனுவை நிராகரித்தார்.
மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் உத்தரவிட்டார்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications