For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.மு.கவும் பு.நீ.கவும்....

By Staff
Google Oneindia Tamil News

சென் னை:

கலைஞர் கருணாநிதியால்தான் நல்லாட்சி தர முடியும். புதிய நீதிக் கட்சிக்கு எத்தனை இடங்களை கருணாநிதி தருகிறார் என்பதுஒரு பிரச்சனையே இல்லை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் சுத்தானந்தன் கூறியுள்ளார்.

உருவான சில காலத்திலேயே அதிருப்தி, பூசல் என புரட்சி ப டைத்துள்ள புதிய கட்சி புதிய நீதிக் கட்சி. இக்கட்சி எக் கூட்டணியில்சேரும் என்பது இன்னும் உறுதியாகவில்ைல. திமுக கூட்டணியில் சேருவது தொடர்பாக இக்கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகத்திற்கும், துணைத் தலைவர் சுத்தானந்தனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தனியாக சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் சீட் கேட்டார் சுத்தானந்தன். பின்னர் கட்சித் தலைவர்கள் சமரச முயற்சிக்குப்பிறகு சமாதானமானார். இந் நிலையில், வியாழக்கிழமை சென்னையில் சுத்தானந்தன் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:

கருணாநிதியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும். கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிஇணைய வேண்டும் என்ற நல்லாசை காரணமாகவே திமுக தலைவரிடம் சீட் கேட்டுப் பேச்சு நடத்தினேன்.

ஆனால் அதற்குள் கட்சியில் பிளவு, மோதல் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு விட்டன.

இதைப் பார்த்து விட்டு, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்படுவதன் நோக்கத்தை கட்சியின் பிரமுகர்கள்எனக்கு எடுத்துரைத்தனர். அதன் பிற கே கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டேன்.

புதிய நீதிக் கட்சிக்கு உரிய இடங்களை கருணாநிதி நிச்சயம் கொடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்சுத்தானந்தன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X