லஸ்கார்- இ தொய்பா தீவிரவாத தலைவன் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், லஸ்கார் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் சலாவுதீன் புதன்கிழமைபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சலாவுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதை போலீசார் தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவேகருதுகின்றனர்.
ஏனெனில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்கொலைப் படை தாக்குதல்சம்பவங்களில் மாஸ்டர் மைன்டாக செயல்பட்டவர் சலாவுதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்காம் மாவட்டம் பஹ்ரூ என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேபுதன்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் சலாவுதீன் உயிரிழந்தார்.
இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த இரண்டுவருடங்களாக ஜம்மு காஷ்மீரில் நடந்த பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு எங்களுக்கு மிகப்பெரியதலைவலியைக் கொடுத்தவர் சலாவுதீன்.
இந்த வருடத் தொடக்கத்தில் ரஜோரி மாவட்டம் மன்ஞ்சக்கோட்டே பகுதியில் போலீசார் சென்று கொண்டிருந்தவாகனத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்ததில் 17 போலீசார் கொல்லப்பட்டனர்.
பல இடங்களில் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னணியில்இருந்து செயல்பட்டவர் சலாவுதீன்தான்.
தொடர்ந்து ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் போலீசாரைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்தீவிரவாதிகள். இருப்பினும் தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிப்போம் என்று நாங்களும் பதில் தாக்குதல்நடத்தினோம் என்றனர்.
துணை ஐ.ஜி கே.ராஜேந்திரா கூறுகையில், லஸ்கார் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவரானசலாவுதீன் எங்களை நோக்கித் தாக்கிகுதல் நடத்தியவுடன், நாங்களும் சுதாகரித்துக் கொண்டு அவரை நோக்கித்திருப்பித் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications