அரசு உதவிக்கு ஏங்கும் பட்டுச் சேலைகள்
காஞ்சிபுரம்:
அரசின் மானியம் கிடைக்காததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டுச்சேலைகள் விற்பனை ஆகாமல்தேங்கி உள்ளன. இதனால் இத்தொழிலை நம்பி உள்ள நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துக்குமார் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்கள்கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் மட்டும் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுச்சேலைகள் மற்றும் 2 கோடி ரூபாய்மதிப்புள்ள துண்டுகள், கைலிகள் விற்பனை ஆகாமல் உள்ளன.
மதுரையில் 4 கோடி ரூபாய் மதிப்பிற்கு டர்க்கி டவல்களும், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சேலை ரகங்களும்விற்பனை ஆகாமல் உள்ளன.
மாநிலத்தின் மற்ற பகுதிகளான ஆரணி, கும்பகோணம் ஆகியவற்றிலும் இதே நிலைமை நீடிக்கிறது.
இதனால் மேற்கொண்டு தொழிலை தொடர தேவையான பணவசதி இன்றி நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர்.
எனவே, தமிழக அரசு நெசவாளர்களுக்கு அளிக்க வேண்டிய மானியத் தொகையை உடனடியாக அளித்துநிலைமையை சீராக்க வேண்டும் என கோரினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications