அடுத்த கட்ட நடவடிக்கை: வைகோ தீவிர ஆலோசனை
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து தேவைப்பட்டால் மதிமுக விலகலாம் என்று கருணாநிதி கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வைகோ தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.
மதிமுக வெளியே போகலாம் என்று கருணாநிதி அறிவித்து விட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் நீடிப்பதுவைகோவுக்கு பெரிய மானப்பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பாஜகவுக்கு இணையாக தொகுதிகள் தர வேண்டும் என்று மதிமுக தனது நிலையில் உறுதியாகஇருந்ததால் வேறு வழியில்லாமல் பாஜகவுக்குக் கொடுத்த இரண்டு தொகுதிகளைப் பறித்து, வைகோவுக்குத் தரவேண்டிய நிலைமைக்குக் கருணாநிதி தள்ளப்பட்டார்.
ஆனால் இப்போது மதிமுகவிடம் கருணாநிதி மிகக் கறாராக நடந்து வருகிறார். வைகோவுடன் கூட்டணியேவேண்டாம் என தனது மகன் ஸ்டாலின் எவ்வளவோ வலியுறுத்திய போதும் கூட ஓட்டுக்கள் ஜெயலலிதாவுக்குச்சென்று விடக் கூடாது என்ற காரணத்திற்காக மதிமுகவுடன் சமரசமாக இருந்து வந்தார்.
இப்போது ஸ்டாலின் நெருக்குதல் காரணமாகவே, மதிமுக வெளியேறலாம் என்று கருணாநிதி கூறியிருப்பதாகக்கருதப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications