ஒலி வேக விமானம்: போயிங் தயாரிக்கிறது
சியாட்டில்:
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் சோனிக் குரூயிஸர் எனப்படும் ஒலி வேகத்தில் செல்லக்கூடிய பயணிகள் விமானங்களை தயாரிக்க முடிவு செய்துஉள்ளது.
போயிங் நிறுவனம் வடிவமைத்த, 500 பயணிகளுக்கு மேல் செல்லக்கூடிய போயிங் 747எக்ஸ்-ஜம்போ வகை விமானங்கள் தயாரிப்பிற்கு தேவையானஆர்டர் கிடைக்கவில்லை.
ஆனால், இதன் போட்டி நிறுவனமான ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனம் தனது ஏ-380 என்ற விமானங்களை தயாரிக்க அதிக அளவில் ஆர்டர்களைபெற்று உள்ளது. இந்த விமானத்தில் 555 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
இதனால் தான் போயிங் நிறுவனம் தனது ஜம்போ விமானத் தயாரிப்பை கைவிட்டு சோனிக் குரூயிஸர் விமானங்களை தயாரிக்க முனைப்பு காட்டுகிறது.
ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்கக்கூடிய கன்கார்ட் வகை விமானங்களை பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும்.
அதோடு, அவ்விமானம் இறங்கவும், கிளம்பவும் மிகப்பெரிய ரன்வேக்கள் தேவை. இந்நிலையில், கடந்த ஆண்டு பாரீஸில் நடந்த விபத்தை அடுத்துஅவற்றின் சர்வீஸ் நிறுத்தப்பட்டது.
தற்போது, போயிங் நிறுவனம் தயாரிக்க உள்ள சோனிக் குரூயிஸர் விமானங்கள் கிட்டத்தட்ட ஒலியின் வேகத்தில் பறக்கக்கூடியவை.
தற்போது உபயோகத்தில் உள்ள பயணிகள் விமானங்கள் அனைத்தையும் விட இந்த வகை விமானங்கள் பல்வேறு வகையிலும் சிறந்தவையாகஇருக்கும்.
பயணிகள் நெரிசலை குறைக்க உதவுவதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்றவையாக இந்த விமானங்கள் இருக்கும் என போயிங் விமான நிறுவனத்தின்தலைவர் ஆலன் முலாலி தெரிவித்தார்.