ஆயுத பேர ஊழலால் எங்களுக்கு பாதிப்பில்லை: பா.ஜ.க.
சென்னை:
ஆயுத பேர ஊழல் குறித்த செய்திகளால் 5 மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எவ்விதபாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னை வந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
தெஹல்கா டாட் காம் இணையதளம் பா.ஜ.க.மேல் ஆயுதப் பேர ஊழல் புகார் கூறியுள்ளது. நாங்கள்குற்றமற்றவர்கள் என்பதை, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் ஆதரவுடன் மக்களுக்குநிரூபிப்போம்.
ஆயுதப் பேர ஊழலைக் காரணம் காட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டார் திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குவரத் தயாராக இருந்தால், அக்கட்சியை ஏற்றுக் கொள்வோம்.
தேவைப்பட்டால் பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்.
தெஹல்கா டாட் காம் இணையதளம் வெளிக்கொண்டு வந்த ஆயுதப் பேர ஊழலால் மத்திய அரசுக்கு நெருக்கடிஏற்படும் என்று மூன்றாவது அணி நினைத்தன. ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் மத்திய அரசுக்கு எவ்விதபாதிப்பும் இல்லை.
பல ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றுதான்பெரும்பான்மையான சட்டநிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது அனைவரும் அறிந்தது.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது சட்டசபைத்தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் பெயர், விவரம் கட்சியின் தேர்தல்குழு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் வெளியிடும் என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.
பா.ஜ.க. தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதன்முதலாக சென்னை வந்துள்ளார்ஜனா.கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு சென்னை விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications