அவசரமாக சென்னை விரைகிறார் வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் வெளியேறலாம் என்று கருணாநிதிஅதிரடியாக அறிவித்ததையடுத்து சாத்தூரில் இருக்கும் வைகோ அவசரமாக சென்னை திரும்புகிறார்.

இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் கூறுகையில், சொந்த வேலை காரணமாக சாத்தூர் சென்றுள்ள வைகோவும், மதிமுக எம்.பி.க்கள் இரண்டு பேரும்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சென்னை திரும்புகின்றனர். இவர்கள் சனிக்கிழமை காலை சென்னை வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

முன்னதாக அவர் மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். திமுக கைவிட்டால் என்ன செய்வது என்பது குறித்துதிருநாவுக்கரசு மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தியுடனும் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஆனால், அவசர பணி காரணமாக வெள்ளிக்கிழமை சாத்தூர் சென்றார். திடீர் அரசியல் திருப்பங்களால் அவர் உடனடியாக சென்னை விரைகிறார்.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை:

திமுக கூட்டணியிலிருந்து தேவைப்பட்டால் மதிமுக விலகலாம் என்று கருணாநிதி கூறியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மதிமுக மாவட்டச்செயலாளர்கள் சென்னையில் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+