துப்பாக்கியை மணந்து கொண்ட ராணுவ பெண் கமாண்டோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உறவினர்களால் கைவிடப்பட்டாலும் துணிச்சலுடன், தனித்து வாழ்ந்து சாதனை புரிந்துவருகிறார் பெண் ராணுவ கமாண்டோ.

ராணுவத்தில் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு வருவதால்உறவினரால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு இப்போது, சொத்தும், துணையுமாகஇருப்பது அவரது ஏகே-47 துப்பாக்கி மட்டும்தான்.

ஷகீலா பர்வீன் (வயது 30), ஜம்மூ- காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கும் சிறப்பு அதிரடி குழுவில் (எஸ்.ஓ.ஜி.) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார்.

ரஜோரி பகுதியில் பணிபுரியும் 3 பெண் கமாண்டோக்களில் இவர்தான் மூத்த அதிகாரிஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஷகீலா தனது உறவினர்களால் கைவிடப்பட்டவர். ராணுவத்தில் இணைந்துதீவிரவாதிகளுக்கு எதிரான பணியில் ஈடுபட்டதால் பர்வீன் அவரது உறவினர்களால்கைவிடப்பட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில்,

என் உறவினர்கள் எனக்கும், அவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனபத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து என்னை ஒதுக்கி விட்டனர். நான் எனதுஏகே-47 துப்பாக்கியையே மணந்து கொண்டுவிட்டேன்.

முன்பு நான் ஆசிரியை பணிக்காக விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்குசென்றிருந்தேன். நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அனைவரும் தங்களுக்கு அந்தவேலை கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டபோது, நான் மட்டும் எனக்குஅந்த வேலை கிடைக்கக்கூடாது என பிரார்த்தித்துக் கொண்டேன்.

என் பிரார்த்தனை பலித்தது. எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அல்லா என்பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தார்.

ராணுவத்தில் அதிக அளவில் ஆண்கள் பணி புரிந்தாலும் அவர்களுடன் பணிபுரிவதில்எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. சில தினங்கள் 2 அல்லது 3 நாட்கள்தொடர்ந்து பணிகள் இருக்கும். அப்போது கூட ஆண்களுடன் பணிபுரிவதில் எனக்குஎந்த விதமான பிரச்சனையும் இருந்ததில்லை.

ராணுவ வீரர்கள் எனக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். அவர்கள் செய்யும் பணிபாராட்டுக்குரியது. காஷ்மீர் போன்ற பிரச்சனைக்குரிய பகுதிகளில் பணிபுரிவதுகடினமானது. அங்கு அவர்கள் கடமையுணர்வுடன் பணியாற்றுவது பாராட்டுக்குரியது.

நான் ராணுவத்தில் சேர்வதற்கு காரணம், இந்தியாவின் முதல் பெண் காவலரும்,சூப்பர் காப் என அழைக்கப்படுபவருமான கிரன்பேடி தான்.

நான் அவரைப்பற்றி பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். நான் அவரை நேரில் சந்தித்துநான் ராணுவத்தில் பணிபுரிவதற்கு அவர்தான் காரணம். அவரை முன்னுதாரணமாககொண்டுதான் நான் ராணுவத்தில் இணைந்தேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்என்றார் பர்வீன்.

பர்வீன் எஸ்.ஓ.ஜியில் இணைந்து 6 வருடமாகிறது. அவர் மிகுந்த நன்மதிப்பைபெற்றுள்ளார். அவர் இதுவரை 15 தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் அவர் அதை மறுக்கிறார்.

பர்வீன் தற்போது தனது விதவைத் தாயுடனும், தனது சகோதரர்களுடன் வாழ்ந்துவருகிறார். சகோதரர்களில் ஒருவர் ராணுவத்தில் பணி புரிகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+